Home » பாலக்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஒரு வழிப் பாதையாக மாற்றம்!டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

பாலக்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஒரு வழிப் பாதையாக மாற்றம்!டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

by Babukanth V
0 comment

போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஒரு வழிப் பாதையாக மாற்றம் டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுன்சிலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், கடை உரிமையாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
சமீப காலமாக பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி.ரோடு, தர்மபுரி – ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடபட்டி வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வயை ஆக்கிரமித்து கடைககளை விரிவுபடுத்தி உள்ளதால் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய முடியாமல் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமில்லாமல் நோய் கிருமிகள் வேகமாக பரவுவதற்க்கும் காரணமாக உள்ளது.
சுகாதாரம் மற்றும் போக்குவரத்து நலன் கருதி பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முற்படும்போது வணிகர்கள் சார்பாக எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் பொருட்டு பாலக்கோடு பேரூராட்சியில் கவுன்சிலர்கள், கடை உரிமையாளர்கள், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பள்ளி வாகனங்களை முறைப்படுத்துவது, காலை மாலை வேளைகளில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரி செய்வது, ஒரு வழிப் பாதை திட்டத்தை செயல்படுத்துவது, பஸ் நிலையத்திற்க்குள் தாறுமாறாக செல்லும் ஆட்டோக்கள், தள்ளுவண்டிகளை கட்டுப்படுத்துவது,
சரக்கு லாரிகளை குறிப்பிட்ட நேரத்தில் நகருக்குள் வருவதை தடை செய்வது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புக்களை தாங்களாகவே அகற்றிகொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
தவிர்க்கும் பட்சத்தில் பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், டி.எஸ்பி. சிந்து, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!