Home » தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோஷங்கள் எழுப்பப்பட்டது

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோஷங்கள் எழுப்பப்பட்டது

by Admin
0 comment

தர்மபுரி மாவட்டம்  பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.செல்வி ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது தங்களது கண்டனத்தை தெரிவித்த நேரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்தும்,செல்வி ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வரும் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது.இதில் ஒன்றிய செயலாளர்கள் கோபால், வடக்கு.செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், நகர செயலாளர் சங்கர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர்பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!