ஜேசிஐ இந்தியா மண்டலம் 16 ன் நிகழ்வான மாதிரி மண்டலப் பயிற்சி பட்டறை ஜேசிஐ ஓசூர் நண்பர்கள் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் இரண்டு நாட்கள் ஓட்டல் கௌரி கிராண்ட் பேலஸ் ல் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் மண்டல இயக்குநர் ஜேசி. ராகேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மண்டலத் தலைவர் ஜேசி. பாண்டியன் மற்றும் மண்டலத்தலைவர் ஜேசி. யுவராஜ் அவர்கள் கலந்து கொண்டனர். தலைமை பயிற்சியாளராக ஜேசி. டென்சிங் பால்ராஜ் அவர்களும் துணை பயிற்சியாளராக ஜேசி. வரபிரசாத் அவர்களும் பயிற்சி அளித்தனர். இதில் 18 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியை சிறப்பாக கற்று கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் ஜேசிஐ ஓசூர் நண்பர்கள் கிளை இயக்கத்தின் நிறுவனர் ஜேசி.தமிழரசன்,
முன்னாள் தலைவர் ஜேசி. சிவானாந்தன்,
தலைவர் ஜேசி. தசரதன்,
ஜேசி. இளவரசன் & ஜேசி. வேல்முருகன் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள்,
கிளை இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள், ஜேசீஸ் ஆப் ஓசூர் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.