மூலிகை செடி வழங்கல்.ஊத்தங்கரை,செப்.4: சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிங்காரபேட்டை வனச்சரகம் சார்பாக மக்களை தேடி மூலிகை மருத்துவம் விழா சனிக்கிழமை நடைபெற்றது.சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சித்த மருத்துவர் தனலட்சுமி,சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜோதிலிங்கம், வனவர் அண்ணாமலை மற்றும் வனச்சரகம் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் அரசு மருத்துவமனைக்கு வந்த பொது மக்களூக்கு 70, மூலிகை மரக்கன்றுகள் வழங்கி, காடுகள் குறித்தும், காடுகளில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மூலிகை மரக்கன்றுகளை வளர்பதினால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனை வளாக்ததில் மூலிகை கனறுகள் நடப்பட்டது. இதில் வனத்துரையினர்,பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
சிங்காரபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & சிங்காரபேட்டை வனச்சரகம் சார்பாக மூலிகை மருத்துவ விழா
previous post