Home » தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.

by Poovizhi R
0 comment

*மை தருமபுரி அமைப்பின் சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது*உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில் அதற்கான மருத்துவத்தை பல நாடுகளும் தேடிய பொழுது நம் தமிழ்நாட்டின் கபசூர குடிநீர் சிறந்த மருந்தாக விளங்கி பொது மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பல மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கபசூர குடிநீர் தூள் பல தன்னார்வ அமைப்புகள், அரசாங்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீண்டும் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக கபசூர குடிநீர் இன்று வழங்கப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் மதிப்புறு முனிவர் சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் தமிழ்ச்செல்வன், சமூக சேவகர் அருணாச்சலம், ஜனனி சத்யநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!