கெலமங்கலம் பேரூர் கழகத்தில் திமுக கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ் அவர்கள் அறிவுறுத்துதல் படிகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலத்தில் திமுக கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் மேலும் புதிய உறுப்பினர்கள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆணையிட்டனர் இதை கருத்தில் கொண்டு கெலமங்கலம் நகர செயலாளர் கே தஸ்தகீர் அவர் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது,இந்த நிகழ்ச்சியில் கெலமங்கலம் பேரூர் கழக நிர்வாகிகள்,ஜான்பாஷா, கருணாநிதி, ஆனந்தய்யா,ஹரி, ரேகா, சுரேஷ், வச்சுரிகுமார், மித்துன் சக்கரவர்த்தி, கோவிந்தராஜ், ராஜாமணி, வெங்கடேஷ், பாபு, மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.