கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் சென்னையில் மஞ்சப்பை விழிப்புணர்வு… சென்னை தியாகராஜ நகர் குந்தூர் சுப்பையாபிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி வினாடி வினா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராஜா சுரேஷ் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகள் பரிசாக வழங்கினார் கருத்தரங்கில் அவர் பேசும்போது பள்ளி மாணவிகள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மேலும் தங்கள் குடும்பத்திலும் இவ்வாறு துணி பைகளை பயன்படுத்த பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.