Home » போச்சம்பள்ளி அருகே வடமலம்பட்டி கிராமத்தில் திடீரென சாம்பல் படிவதால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

போச்சம்பள்ளி அருகே வடமலம்பட்டி கிராமத்தில் திடீரென சாம்பல் படிவதால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

by Poovizhi R
0 comment

வடமலம்பட்டி கிராமத்தில் திடீரென சாம்பல் படிவதால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சிகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இன்று காலை முதல் வீடுகள் மற்றும் வீதிகளில் சாம்பல் படிந்து வந்தால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் மொட்டை மாடிகள், வெளிப்புறங்களில் காய வைக்கப்பட்டிருந்த துணிகள், என அனைத்து பகுதிகளிலும் சாம்பல் படிந்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாம்பல் படிந்து வருவதால் பொது மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரங்கநாதன் அவர்களிடம் பொது மக்கள் முறையிட்டனர். இதையடுத்து விசாரித்தபோது, கீழ்மைலம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவரது விவசாய கரும்பு தோட்டத்தில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததால், அதனுடைய சாம்பல் படிந்திருப்பது தெரியவந்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!