*மை தருமபுரி ப்ளட் ஹேண்ட்ஸ் மூலம் இரத்ததானம் அளித்த செந்துளி நாயகி*மை தருமபுரி அமைப்பின் மூலம் அவசர ரத்ததான சேவை, இரத்ததானம் முகாம் ஏற்பாடு செய்து வருகிறோம். பொது மக்கள், மாணவர்கள் ஆகியோரிடம் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி புதுப்புது கொடையாளர்களை உருவாக்கி வருகிறோம். இரத்ததானம் கொடை அளிக்க ஆண்களே தயக்கமும், காரணமும் சொல்லுகின்ற இந்த வேளையில் பெண்கள் பலரும் இரத்ததானமும், தட்டணுக்கள் தானமும் கொடை வழங்கி வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி குமாரசாமி பேட்டையை சேர்ந்த திருமதி.கௌரி மாதவன் ஏ1 பாசிட்டிவ் இரத்த வகையை கொண்டவர், இன்று இரத்ததானம் கொடை வழங்கினார். மை தருமபுரி அமைப்பின் சார்பாக இரத்ததானம் கொடை அளிக்கும் பெண்களுக்கு “செந்துளி நாயகி” என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறோம். இரத்ததானம் அளித்த நாயகிக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.