பெரியதக்கப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பெரிய முனிஸ்வரர் ஆலயத்தில் உற்சவமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியதக்கப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரிய முனீஸ்வரர் திருக்கோவிலில் புதியதாக உற்சவமூர்த்திகளின் பிரதிஷ்டை நடைப்பெற்றது.இதன் முன்னதாக பெரியதக்கப்பள்ளி கிராம மக்கள் உற்சவமூர்தியை மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்த கிராம மக்கள்பெரிய முனீஸ்வரர் கோவில் பிரதிஷ்டை செய்தனர்.இதனைத் தொடர்ந்து புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்செய்யப்பட்டது,தொடந்து 48 நாள்கள் உற்சவமூர்த்திக்கு சிறப்புகள் பூஜைகள் துவங்கியது.இந்த பூஜைகளுக்கான ஏற்பாடுகளை பெரியதக்கப்பள்ளி கிராம மக்கள் சிறப்பாக செய்துவருகின்றனர்.