காவேரிப்பட்டணத்தில் பூமி தினத்தை முன்னிட்டு மஞ்சப்பை விழிப்புணர்வு காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பில் பூமி தினம் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் தேசிய மாணவர் படை அலுவலர் கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மரக்கன்றுகள் நடுதல் மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி வினாடி வினா ஆகியவை நடத்தப்பட்டன சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மஞ்சப்பைகள் பரிசாக வழங்கினார் கருத்தரங்கில் காவல் உதவி ஆய்வாளர் பேசும் போது நெகிழி பைகளால் நமது பூமிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது எனவே நாம் அனைவரும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் ஆசிரியை சித்ரா கணித ஆசிரியர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் செய்திருந்தார்.