*சந்தைப்பேட்டை முதியோர் இல்லத்திற்கு காலனிகள் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்*தருமபுரி நகராட்சி நகர்ப்புற வீடற்றோர்களுக்கான உண்டு உறைவிட முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு, மளிகை பொருட்கள், அன்றாட தேவையான பொருட்கள் மை தருமபுரி குடும்பத்தினர் மூலம் வழங்கப்பட்டது. தற்போது வெயில் வெப்பம் அதிகமாக உள்ளதால் முதியோர் இல்லத்திற்கு காலனிகள் வழங்க சிங்கப்பூர் சுதாகரன் அவர்கள் உதவி செய்தார். மை தருமபுரி குடும்பத்தினர் சார்பாக நிறுவனர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் தமிழ்செல்வன், அருணாசலம், தாரணி, தமிழரசு,சார்லஸ், ஈஸ்டர் தாஸ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.