Home » தேவர் ஊத்துப்பள்ளம் அரசு துவக்கப்பள்ளிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் வழங்கினார்.

தேவர் ஊத்துப்பள்ளம் அரசு துவக்கப்பள்ளிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் வழங்கினார்.

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி தேவர் ஊத்துப்பள்ளம் அரசு துவக்கப்பள்ளிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு வழங்கி, பள்ளியில் ஸ்மார்ட் போர்டு வகுப்பறையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் சுமதி, ஆசிரியர் பயிற்றுனர் கோகிலா, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை தலைவர் கணேசன், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!