Home » கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் இன்று கிருஷ்ணகிரி நகராட்சியில் தூய்மை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் இன்று கிருஷ்ணகிரி நகராட்சியில் தூய்மை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.1 கோடியே 94 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.05.2023) தூய்மை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்காத வண்ணம், மழைநீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வையிட்டு, நூலக கட்டிடத்தை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, பழையபேட்டையிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் சாலையில் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் உடனடியாக தூர்வார வேண்டும். புதிய கால்வாய்கள் கட்ட கருத்துரு தயார் செய்ய வேண்டும்.மேலும், புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு பேருந்து நிலையத்தை புதிய வண்ணம் பூசவும், கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கவும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை சீராக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட வேண்டும். பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கடைகளை அமைக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமானதாக விற்க வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், சின்ன ஏரியை அழகுபடுத்தும் பணிகளுக்கு ஏற்கனவே கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய மீண்டும் கருத்துரு தயார் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக புறநகர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு, பேருந்துகள் பராமரிப்பு, இட வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79 இலட்சம் மதிப்பில் பாப்பாரப்பட்டி, தாசாகவுண்டன் ஏரியில் சுற்றுசுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகளையும், ஏரியைச் சுற்றி சுகாதார தூய்மை பணிகளையும், மேலும் பொதுமக்கள் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி நகராட்சிஆணையர் திருமதி.எம்.ஆர்.வசந்தி, நகராட்சி உதவி பொறியாளர் திரு.செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன், இளநிலை அலுவலர் திரு.அறிவழகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!