ஒசூர் ஏசியன் பேரிங் நிர்வாகத்தின் தொழிலாளர் பிரச்சனையில் மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிட கோரியும் ஏபிஎல் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து வரும் 29.05.23 அன்று பாகலூர்-பெலத்தூரில் உள்ள ஏபிஎல் ஆலை வாயில் பகுதியில் இருந்து கோட்டைவரை நடைபெறவுள்ள நடைபயணம் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் நிலையில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம்,திராவிடர் கழக தொழில்சங்கத்தினரிடம் ஆதரவு வேண்டி ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூணியன் பொது செயலாளர் கிறிஸ்துநேசன் கடிதம் வழங்கினார்.இந்நிகழ்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தொழிலாளரணி மாவட்ட செயலாளர் பா.வெற்றிசெல்வன்,ஏசியன் பேரிங் தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர்கள் நாரயணன்,பாபு,சக்திவேல்,ராதகிருஷ்ணன்,முத்துகுமாரசாமி,ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.