Home » அஇஅதிமுக பொதுச்செயலாளர் எட்ப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா மத்தூரில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர்

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எட்ப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா மத்தூரில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர்

by Poovizhi R
0 comment

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்களின் ஆணைக்கிணங்க பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் பேருந்து நிலையத்தில் மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன….முன்னதாக கழக நிறுவனத் தலைவர், MGR அவர்களின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், கே.அசோக்குமார் MLAஅவர்கள் முன்னிலையிலும்.ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.தமிழ்ச்செல்வம் MLA அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றியபேரூர் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!