Home » தண்டுகாரணஅள்ளியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை

தண்டுகாரணஅள்ளியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை

by Poovizhi R
0 comment

தண்டுகாரணஅள்ளி கிராமத்தில் 6இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தண்டுகாரணஹள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் முதல் சரவணன் வீடு வரை சுமார் 700 மீட்டர் தூரம் சாக்கடை கழிவு நீர் கால்வாய் அமைக்க 15வது நிதிக்குழு மானிய நிதி மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சர், கே.பி.அன்பழகன் 6இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசியதாவது தொகுதியில் உள்ள கடைகோடி கிராமங்களும் அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களை சென்றடைய பாடுபடுவதாக கூறினார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில் செந்தில், கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள் ராஜா, வாசு, அசோக் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!