Home » கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் காரின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு

கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் காரின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் காரின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்புகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பாபு மாற்றுத் திறனாளிகள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமை துவக்கி வைப்பதற்கு வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து அவர் அங்கிருந்த செல்ல காரில் ஏறினார். அப்போது போச்சம்பள்ளி அடுத்த, புளியாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத், 38, என்பவர் கோட்டாட்சியர் காரின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து வினோத்திடமிருந்து மனுவை பெற்று அவர் கோரிக்கை கேட்டறிந்தார். தான் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து வினோத் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து வினோத் கூறுகையில், தான் புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசித்து வருவதாகவும். அதே பகுதியில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தான் வீட்டிற்கு செல்லும் பொது வழிப்பாதையை அடைத்து விட்டதாகவும், இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!