கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பாக ரூ. 8 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக கட்டிடத்தில் திட்ட அலுவலர் அறை, உதவி திட்ட அலுவலர்கள் அறைகள், பொறியியல் துறை அலுவலகம், கூட்டரங்கம், பார்வையாளர்கள் அறை, வாகன நிறுத்தும் இடம் போன்ற கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இ.ஆ,ப. அவர்கள் இன்று (16.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.வந்தனா கார்க் இ.ஆ.ப., செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) திரு.பசுபதி, உதவி பொறியாளர் திரு.கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.