Home » SC/ST நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கி கல்விஉதவித்தொகை பெறலாம்.

SC/ST நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கி கல்விஉதவித்தொகை பெறலாம்.

by Poovizhi R
0 comment

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கி கல்விஉதவித்தொகை பெறலாம்.தருமபுரி மாவட்டத்தில்2022 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணாக்கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி ந-முலுஊ (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கிக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறுமாவட்டஆட்சித்தலைவர்தெரிவித்துள்ளார்.திருமதி.கி.சாந்திஇஆப., அவர்கள்

You may also like

Leave a Comment

error: Content is protected !!