அஇஅதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள்வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,சூளகிரி ஒன்றியம் நெரிகம் ஊராட்சி குல்லு கிராமத்தில் பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பேருந்து செல்லும் வழியில் சாலை ஓரத்தில் ஆபத்தான முறையில் கிணறு ஒன்று இருப்பதால் அரசு போக்குவரத்து கழகம், பேருந்தை இயக்க முன்வராத நிலையில்கோரிக்கையை ஏற்றுசம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில்சென்று பார்வையிட்டு, தனது சொந்த நிதியில் ஆபத்தான முறையில் இருக்கும் கிணற்றுக்கு, தடுப்புச்சுவர் கட்டி தருவதாக உறுதியளித்து அதற்கான வேலைப்பாடுகளை துவக்கி வைத்தார். அப்பகுதி விவசாயிகள் தேவைகளுக்கும் குடிநீர் பம்பு நீரேற்றும் குறையினால் ஏற்படுகின்ற மின் தேவை 100 KV மின் இணைப்பை 200 KV யாக மாற்றி தரும்படி கோரிக்கை வைத்தனர். மாற்றி அமைக்க உறுதி அளித்தார்.