கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு… காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை மாணவர்கள் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இசை கருவிகளை வாசித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினார்கள் மாணவர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் செய்திருந்தார்