Home » மண்டலம் 16 ஜே சி க்களின் மண்டல இடை மாநாடு மகிழ்உலா-2023 ஜேசிஐ வேலூர் கிங்ஸ் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் சிஎம் மஹாலில் நடைபெற்றது.

மண்டலம் 16 ஜே சி க்களின் மண்டல இடை மாநாடு மகிழ்உலா-2023 ஜேசிஐ வேலூர் கிங்ஸ் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் சிஎம் மஹாலில் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

மண்டலம் 16 ஜே சி க்களின் மண்டல இடை மாநாடு மகிழ்உலா-2023 ஜேசிஐ வேலூர் கிங்ஸ் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் சிஎம் மஹாலில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வேலூர் ஜேகே பியூயல் தொழிலதிபர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்களும், திறவுகோல் பேச்சாளராக ஜேசிஐ இந்தியாவின் நிர்வாக குழு தலைவர் ஜேசி ரவிசங்கர் அவர்களும், சிறப்பு அழைப்பாளராக வேலூர் கண்ணா உணவக உரிமையாளர் பூமிநாதன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கௌரவ விருந்தினராக விஜய் டிவி புகழ் நகைச்சுவை பேச்சாளர் பழனி அவர்கள் தனது நகைச்சுவையால் ஜேசிக்களை மகிழ்ச்சியில் உலாவச் செய்தார். இந்த மண்டல இடை மாநாட்டினை மண்டல துணைத் தலைவர் ஜேசி பிரேம்ஆனந்த் அவர்கள் வழி நடத்தினார். மண்டலத் தலைவர் ஜேசி ராஜேஷ் சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டினை தொடங்கி வைத்தார். உபசரிப்பு கிளை இயக்கத்தின் தலைவர் ஜேசி விஷ்ணு தேவன் வரவேற்றார். இதில் ஓசூர் கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் சென்னை திருவண்ணாமலை பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஜேசிக்கள் தங்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டு கொண்டாடினர். சிறப்பாக சேவை செய்த கிளை இயக்க தலைவர்களுக்கு மண்டல தலைவர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். சிறப்பான வணிகம் செய்வதற்கான வியாபார யுக்திகள் இம்மாநாட்டின் இடையே வழங்கப்பட்டது. மாநாட்டு இயக்குனர் ஜேசி சரவணன் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜேசி பிரபு ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். மாநாட்டின் நிறைவாக மண்டல செயலாளர் ஜேசி மஞ்சுநாத் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!