செயின்ட் பீட்டர்ஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி நடத்திய இலவச கோடைகால பயிற்சி முகாம்.கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி நடத்திய இலவச கோடைகால பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது. மே 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இலவச கோடைகால பயிற்சி முகாமில் பங்கு பெற்ற மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பான முறையில் விளையாட்டு பயிற்சிகளான சிலம்பம், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கால்பந்து, தடகளம் போன்ற விளையாட்டுகளும் ஆங்கிலம் பேசுதல், ஹிந்தி பேசுதல், கைவினை கலைகள், கணிதம் மற்றும் ஆங்கிலம் விளையாட்டு முறையில் கற்பித்தல் போன்ற பயிற்சிகள் அனைத்தும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாளான இன்று பயிற்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் அவர்கள் சான்றிதழ்களையும் மரக்கன்றுகளையும் கொடுத்து பயிற்சியை நிறைவு செய்தனர். இந்த இலவச கோடைகால பயிற்சி முகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.