Home » தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா

by Poovizhi R
0 comment

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. மாவட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். காரிமங்கலம் பிர்காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் இருந்து பட்டா மாறுதல், பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 125க்கும் மேற்பட்ட மனுக்கள் தரப்பட்டது. தொடர்ந்து இன்று 24 ஆம் தேதி கம்பைநல்லூர் பிர்காவிற்கும் நாளை 25ஆம் தேதி பெரியாம்பட்டி பிர்காவிற்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது. தாசில்தார் சுகுமார், பேரூராட்சி சேர்மன் மனோகரன், வட்ட துணை ஆய்வாளர் ஜாகிர் உசேன், வட்ட சார் ஆய்வாளர் குமரவேல்,வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரன், ஆர் ஐ மணி, கவிப்பிரியா, விஏஓ க்கள் கதிரவன், அசோக், சிலம்பரசன், கணேசன், முருகன், மோகன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!