அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் MLA, Ex.MP கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறிக்கைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள். கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும். இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கே.அசோக்குமார் MLA.ExMP கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், 29.05.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், புதிய பேருந்து நிலையம் அருகில், அனைத்து ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள் முன்னிலையில், கழக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி B.A.B.L.,MLA EXMP வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டனபேரூரையாற்ற உள்ளார்.அதுசமயம் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் சார்பமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்