கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்துார் கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி.கே.ஆர்.ஹரிணி அவர்கள் இந்திய குடிமை பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெற்றி பெற்றதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ,ப. அவர்கள் இன்று (25.05.2023) ஹரிணி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.