பாகலஹள்ளி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு பணியை தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டகபட்டி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூபாய் 5.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் அவர்கள் பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் காமராஜ் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.