அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.ஆர்.வி.கோவிந்தராஜன் அவர்கள் பாமக நிறுவனர் மருத்துவர் அய்யாவின் கொள்கையை ஏற்று, மருத்துவர் அன்புமணி வழிகாட்டுதலின் பேரில், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ அவர்களின் ஆலோசனைப்படி தன்னை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக செயலாளர் கி.கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் பா. முனிராஜ் மாவட்ட துணைச் செயலாளர் பி.எல். சரவணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் காதர் பாஷா,இளைஞரணி மாவட்ட செயலாளர் பூபதி, ஓசூர் நகர தலைவர் ஆர்.தமிழரசன் ஆகியோர் முன்னிலையில் தன்னை பாமக வில் இணைத்துக் கொண்டார்