கோவையைச் சார்ந்த ராஜன் என்பவர் தன்னார்வலராகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மாத ஊதியத்தில் ஒரு பகுதியை ஆதரவில்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் முதியவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவளிக்கும் உன்னத பணியை மேற்கொண்டு வருகிறார். ஆதரவில்லாமல் மனநலம் குன்றி இருப்பவர்களுக்கு முடிதிருத்தம், முகச்சவரம் செய்து புத்தாடைகளை வழங்கி வருகிறார். இவரது பணி மனித நேயமிக்க பணியாகும். இவரது சேவையைப் பாராட்டி புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.