Home » ஊத்தங்கரை தொகுதி கல்லாவி சிங்காரப்பேட்டை சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ கேபி.முனுசாமி நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

ஊத்தங்கரை தொகுதி கல்லாவி சிங்காரப்பேட்டை சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ கேபி.முனுசாமி நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கல்லாவி, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, ஆகிய பகுதிகளில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.
அ.தி.மு.க., கழகத் துணை ஒருங்கிணைப்பாளர், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ., கேபி.முனுசாமி, நீர், மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து,சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், பொதுமக்களுக்கு, நீர்,மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் பிஞ்சு, இளநீர்,நுங்கு,திராட்சை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ் செல்வம், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தேவேந்திரன், வடக்கு வேடி, நகர செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லாவி பஞ்.,து தலைவர் ராமன், சிங்காரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சங்கர் நாராயணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!