Home » மாங்கனி கண்காட்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சத்தீஸ்குமார் நாய் கண்காட்சியை துவக்கி வைத்தார்

மாங்கனி கண்காட்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சத்தீஸ்குமார் நாய் கண்காட்சியை துவக்கி வைத்தார்

by Admin
0 comment

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் கால்நடைபராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.சத்தீஸ்குமார் அவர்கள் இன்று (10.7.2022) துவக்கி வைத்து தேர்வு பெற்ற செல்லபிராணிகளின் உரிமையாளர்களுக்கு பாராட்டு சான்றிதல் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

கிருஷ்ணகிரி அல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்களது நாய்களை கண்காட்சியில் இடம்பெற வைத்திருந்தனர் நாய்களின் உடல் ஆரோக்கியம், கீழ்ப்படியும் திறன், தோற்றம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையிலான நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியில் வெளிநாட்டு ரகங்களான பீகில், ராட்வீலர், கோல்டன் ரெட்ரீவர், டாபர்மேன், லேபர் டார்,ஜெர்மென் சப்பர்டு,சைபீரியன் ஹஸ்கி,போன்ற நாய்களும் உள்நாட்டு ரகங்களான கோம்பை, சிப்பி பாறை, ராஜபாளையம்,கண்ணி போன்ற நாய்களும் போட்டிகளில் இடம்பெற்றன இதில் பல்வேறு வகையிலான நாய்கள் பரிசுகளை தட்டி சென்றது.மேலும் காவல்துறையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டிய நாய்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

You may also like

Leave a Comment

error: Content is protected !!