Home » கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 49-ம் ஆண்டு தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 49-ம் ஆண்டு தேர்த்திருவிழா

by Admin
0 comment

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 49-ம் ஆண்டு தேர்த்திருவிழாவின்போது அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ப்பு.கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின்  49-வது வருட திருத்தல தேர்திருவிழா ஜூலை 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது.. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது..தேர்த்திருவிழாவின் கடைசி நாளான இன்று காலை 8-00 மணிக்கு தருமபுரி மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது..இன்று மாலை 7-00 மணியளவில் வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் காவேரிப்பட்டிணம் பங்குத்தந்தை அருட்திரு.N.S.இருதயம் அவர்களால் மந்தரிக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்தது..இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்..இந்த நிகழ்ச்சியினையொட்டி தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது..

You may also like

Leave a Comment

error: Content is protected !!