Home » ஓசூர் புத்தகத் திருவிழாவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின

ஓசூர் புத்தகத் திருவிழாவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகிற ஓசூர் புத்தகத் திருவிழாவின் 11 வது ஆண்டு விழாவில் 12-7-22 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் மங்கள இசை, பரதநாட்டியம், தேவாரம் பாடல்களை இசைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக அரங்கேற்றினார்கள்.புத்தக திருவிழா குழுவினர் சார்பில் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இசைப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி திரிவேணி,தேவார ஆசிரியர் திரு கதிர் பாரதி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிருஷ்ணகிரி கிளை செயலாளர் திரு சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.கதிர் பாரதி மற்றும் ஆறுமுகம் தேவாரம் பாடல்களை பாடி சிறப்பித்தனர்,அண்ணா மலர் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார்,காளி வேடமிட்டு ஞயான சக்தி நடனமாடி காண்போரை வியப்பில் ஆழ்த்தினார், வயலின் இசை கலைஞர் வரதன், மிருதங்க கலைஞர் சதிஸ்,நாதஸ்வர களைஞர்கள் பழனி வேல் மற்றும் மூர்த்தி, தவில் இசைகளைஞர்கள் யஷ்வந் மற்றும் தருண்,ஆகியோர் தங்களது கலை திறமைகளை காட்டி விழாவை சிறப்பு செய்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!